சாட்ஜிபிடி அலை வீசத்துவங்கிய போது, சாட்ஜிபிடி சார்ந்து பல துணை சாட்பாட்கள் உருவாக்கப்பட்டன. இப்படி தான் விவசாயிகளுக்கான கிஸான் ஜிபிடியும் ( ) உருவாக்கப்பட்டது. இப்போது கிஸான் ஏஐ (https://kissan.ai/ ) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த சாட்பாட்டுடன் விவசாயிகள் பயிர் பாதுகாப்பு துவங்கி, விலை நிலவரம் வரை பலவிதமான வேளாண் தகவல்களை பெறலாம்.
விவசாயம் சார்ந்த தகவல்களை விவசாயிகள் பெறுவதில் உள்ள இடைவெளியை போக்கும் வகையில் இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளதாக கிஸான் ஜிபிடியை உருவாக்கிய பிரதிக் தேசாய் கூறியுள்ளார். இந்த சாட்பாட், ஓபன் ஏஐ நிறுவனத்தின் ஜிபிடி 3.5 நுட்பத்தை பயன்படுத்துகிறது.
ஆங்கிலம் தவிர, தமிழ் உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் இந்த சாட்பாட்டுடன் உரையாடலாம். குரல்வழி சேவையும் இருக்கிறது. ஆண்ட்ராய்ட் செயலியாகவும் அணுகலாம்.
பிரதிக் தேசாய், டிடோடி எனும் வேளாண் ஸ்டார்ட் அப் நிறுவத்தையும் நடத்தி வருகிறார். கிஸான் ஏஐ சாட்பாட்டிற்கான தகவல் அறிவு தரவு பட்டியலை இந்நிறுவனம் உருவாக்கியிருப்பதாக அறிய முடிகிறது.